
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருள்மிகு பங்கஜவல்லி தாயார் சமேத ஸ்ரீ நிவாச பெருமாள் கோவிலில் வைகாசி பெருவிழா நடைபெற்றதுஇதனையொட்டி உலக நன்மைக்காகவும், சகல பரிகார தோஷ நிவர்த்திக்காகவும் சுதர்சன ஹோமம் நடந்தது.

ஹோமத்தை தொடர்ந்து பால், தயிர், மஞ்சள்,சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வைத்து சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது.கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி, தக்கார் லட்சுமி, பாபநாசம் இறைபனி மன்ற தலைவர் குமார், செயலாளர் வெங்கடேசன், கோவில் கணக்கர் முருகபாண்டியன், மற்றும் உபயோதாரர்கள் உட்படதிரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.