பழமை வாய்ந்த மாடர்ன் தியேட்டர் நினைவு தூணை அபகரிக்க முயற்சி : மாவட்ட ஆட்சியர் மீது பிரபல தொழிலதிபர் மிரட்டல் – மேலாண்மை இயக்குனர் விஜயவர்மா பேட்டி..!

5 Min Read
மேலாண்மை இயக்குனர் விஜயவர்மா

சேலத்தில் பிரபலமான பழமை வாய்ந்த மாடர்ன் தியேட்டர் நினைவு தூணை அபகரிக்க முயற்சி. மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியர் மீது பிரபல தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு. தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. சேலம் வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் மேலாண்மை இயக்குனர் விஜயவர்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

- Advertisement -
Ad imageAd image

சேலம் ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் உள்ளது. மார்டன் தியேட்டர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் பல்வேறு முன்னணி நடிகர்களை உருவாக்கிய மார்டன் தியேட்டர்ஸ் 2004 ஆம் ஆண்டு ரவிவர்மா என்பவருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகம் விற்பனை செய்தது. இதனையடுத்து மார்டன் தியேட்டர்ஸ் தற்போது வீட்டு மனைகளாக உருவெடுத்தது. சேலத்தின் பிரபலமான மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகம் வீட்டு மனைகளாக ஆனாலும், அதன் முகப்பு பகுதி தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரவிவர்மா மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னாள் முதலமைச்சர் கலைஞரும் நேரில் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த 2023 ஜனவரி மாதம் தமிழக முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்தபோது மார்டன் தியேட்டர்ஸ்யை பார்வையிட்டு அதன் முகப்பு பகுதியில் நின்று செல்பி எடுத்தார். இந்த புகைப்படம் பெரும் வைரலானது. முதல்அமைச்சர் புகைப்படம் எடுத்த தருணம் மாடன் தியேட்டர்ஸ் நிர்வாகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியது. அன்று இரவே மாவட்ட ஆட்சியர் ரவிவர்மா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிர்வாக இயக்குனரான என்னை நேரில் அழைத்து தமிழக முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலாண்மை இயக்குனர் விஜயவர்மா

இதன்படி ரவிவர்மா கன்ஸ்ட்ரக்சன் மேலாண்மை இயக்குனர் விஜயவர்மா மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோர் மூவரும் சந்தித்து பேசியதாக புகைப்படத்தை காண்பித்து கூறுகிறார். அப்போது தமிழக முதலமைச்சர் சம்பந்தப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் இடத்தை பராமரித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்ததாகவும், மேலும் அங்கு உள்ள 1345 சதுர அடி நிலம் வேண்டும் என்றும் விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள் என முதலமைச்சர் கூறியதாக தெரிவித்தார். இதற்கு அவர் குடும்பத்தோடு கலந்து உரையாடிவிட்டு சொல்வதாக தெரிவித்து விட்டு வந்து விட்டதாகவும் பிறகு மாவட்ட ஆட்சியர் நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சிலை வைக்க தமிழக முதலமைச்சர் விரும்பியதாகவும், அதனால் அந்த இடத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என தெரிவித்ததாகவும், பலமுறை தனியாக நேரில் அழைத்து தெரிவித்தார். இதற்கு தான் மறுப்பு தெரிவித்ததோடு யோசித்து சொல்வதாக தெரிவித்ததாகவும் கூறினார். இந்த நிலையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சந்தித்து தன்னை இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசியதாகவும் தெரிவித்தார்.

பிரபலமான மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பு பகுதி நினைவுச்சின்னமாகவும், மூன்று முதலமைச்சர்களையும், பல்வேறு ஜாம்பவான்களையும் உருவாக்கிய இடம் என்பதால் அதை சிறிய அருங்காட்சியமாக அமைக்க சொந்த செலவில் ஏற்பாடு செய்ய திட்டமிட இருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் கேட்டது. தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் இதனால் யோசித்து முடிவு செய்து சொல்வதாக தெரிவித்தேன் என்றார். மேலும் அவ்வாறு அந்த இடத்தில் சிலை வைக்க வேண்டுமானால் அந்த இடத்தை உருவாக்கிய சுந்தரம் அவர்களுக்குத்தான் சிலை வைக்க வேண்டும் ஏனென்றால் அவர்தான் அந்த இடத்தின் உரிமையாளர் முன்னாள் முதலமைச்சர்கள் அனைவரும் மாடர்ன் தியேட்டரில் சம்பளத்திற்காக வேலை பார்த்தவர்கள் என முன்னாள் முதல்வர்கள் என்றும் பார்க்காமல் கடுமையாக பேசினார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் திடீரென மாநகராட்சி பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளை அனுப்பி சம்மந்தப்பட்ட மாடன் தியேட்டர்ஸ் உள்ள முகப்பு பகுதியை திடீரென அத்துமீறி அளவீடுசெய்து தன்னை அச்சுறுத்தியதகாவும் தன்னுடைய பேரில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பு பகுதி மற்றும் 1345 சதுரடி நிலம் உள்ளதற்கான அனைத்து ஆதாரங்களும் வருவாய் துறையின் சார்பில் வழங்கப்பட்ட ஆவணங்களை காட்டியும் அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் தன்னை ஒருமையில் பேசி அவமரியாதை செய்ததோடு தன்னை அச்சுறுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலாண்மை இயக்குனர் விஜயவர்மா

மேலும் எனக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் கோரிமேடு தமிழ்நாடு ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக தமிழ்நாடு ஹவுசிங் போர்டுக்கும் எனக்கும் வழக்குகள் நிலைமையில் உள்ளது. இந்த நிலையில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரிகள் அத்துமீறி அங்கு சென்று அங்கு போடப்பட்டிருந்த பெயர் பலகை மற்றும் அலுவலகத்தை அத்துமீறி நுழைந்து ஜேசிபி வாகன மூலம் இடித்து தழுவியதாகவும் தெரிவித்தார். இது குறித்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் நீதிமன்றமும் அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே தனக்கு சொந்தமான மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகத்திற்குள் நுழைந்து அதிகாரிகள் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம் என குறிப்பிட்டு முட்டுக்கல் நட்டது கண்டிக்கத்தக்கது என்றும், மாவட்ட நிர்வாகம் குறிப்பாக மாவட்ட ஆட்சியர் நேரடியாக களத்திற்கு வந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அளவீடு செய்ததை நேரில் பார்வையிட்டது அதிர்ச்சி அளித்ததாகவும் தெரிவித்தார்.
இத்தனை அத்துமீறல்களையும் தான் சந்தித்ததாகவும் தான் ஏற்கனவே சேலம் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராகவும் தன்னுடைய தந்தை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தன்னுடைய தாய் மாமன் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்னுடைய மாமனார் திமுக சார்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆக இத்தனை அரசியல் பின்புலம் இருந்தும் தனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலைமை என்றும் கேள்வி எழுப்பினார்.

மாவட்ட நிர்வாகம் நேரடியாக என்னை அச்சுறுத்துவதாகவும், இதனால் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், என் தந்தை நோயைப் பட்டுள்ள நிலையில் அவரை ஒருமையில் திட்டுவதும் அதிகாரிகள் அச்சுறுத்துவதாக இருந்துள்ளனர். எனவே முதலமைச்சர் இதனை நேரடியாக தலையிட்டு தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேச முன்வந்த போதும் தான் அதை தவிர்த்து வருவதாகவும் தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்க்கு சென்று செய்தியாளர்கள் முன்னிலையில் அவர் தன்னிலை விளக்கம் அளித்தார். மாவட்ட ஆட்சியர் மீது தொழிலதிபர் ஒருவர் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கு முன்னதாக கலைஞர் சிலையை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply