தேங்காய் ஓட்டில் அழகிய கைவினை கலைப் பொருட்கள்

2 Min Read
குமரகுரு

தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கைவினைக் கலைஞர் குமரகுரு, இவர் சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டு, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில், வணிக வரைகலை பயின்றுள்ளார், சுமார் 30 ஆண்டுகாலம் அரசு பணிசெய்து வரும் நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் குமரகுருவிற்கு ஏற்பட்டது,

- Advertisement -
Ad imageAd image

இதனையடுத்து அரசு வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தற்போது வரை சுமார் 25 ஆண்டு காலம் கைவினை தொழில் செய்து வருகிறார், தேங்காய் மற்றும் தேங்காய் ஓடுகளை சந்தைகளில் தரம் பிரித்து வாங்கி அவற்றை இயந்திரத்தின் மூலம் கட்டிங் செய்து பின்னர் தேங்காய் ஓடு பாலிஷ் செய்து, கைவினை கலை பொருட்களுக்கு தேவையான பூ டிசைனை உருவாக்கி அவரின் எண்ணத்திற்கு ஏற்ப கலை நியமிக்க பொருட்களை உருவாக்கி வருகிறார்,

தேங்காய் ஓடுகளை மட்டுமே கொண்டு அழகிய அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களான தேனீர் கப்,ஜார், கரண்டி, பர்ஸ், கீ செயின் மற்றும் அலங்கார அணிகலன்கள் ஆகியவை செய்யப்படுகிறது, இவருடைய கைவினைப் பொருட்கள் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளுக்கும் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன,

மேலும் மத்திய,மாநில அரசின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியிலும் இவருடைய கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன, மத்திய அரசின்  கைவினைக் கலைஞர் (தேங்காய் ஓடு கலைப் பொருட்கள்) அடையாள அட்டையும் பெற்றுள்ளார், இவருடைய கலைப் பொருட்கள் முழுக்க முழுக்க இயற்கை முறையிலான பொருட்களைக் கொண்டு(தேங்காய் ஓடு, குச்சி) மட்டுமே, எந்தவிதமான ரசாயன பூச்சு இல்லாமல் கலைப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது, மத்திய,மாநில அரசுகள் மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சுமார் 700 நபர்களுக்கு கைவினை கலைப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சியினையும் இவர் வழங்கி உள்ளார்,

இது குறித்து தொழில் முனைவோர் குமரகுரு கூறும்போது, சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மீது உள்ள ஆர்வத்தால் அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று சுயமாக கைவினை கலைப் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், புதுமையான முயற்சியாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், வீணாகும் தேங்காய் ஓட்டிலிருந்து அழகிய கலை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும்,மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளதாகவும், அரசு சார்பில் ஏராளமான உதவிகள் செய்யப்படுகின்றன, என்றும் தமிழகத்தில் இளைஞர்களிடம் கற்றுக் கொள்ள ஆர்வம் குறைவாக உள்ளது, வெளி மாநிலங்களில் நிறைய பயிற்சிகளை அளித்துள்ளேன், எனவே இளைஞர்களுக்கு வாய்ப்புள்ள நல்ல கலை, அவர்களின் திறமையின் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்

Share This Article

Leave a Reply