அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் உள்ள முண்டனார் கோவில் அருகில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் மர்மமான பொருள் மிதந்து வருவது போல் தெரிந்துள்ளது. இதனையடுத்து சிறுவர்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி பார்த்தபோது பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை என தெரியவந்தது இதனை எடுத்து சிறுவர்கள் ஆற்றில் மிதந்து வந்த பெண் சிசுவை தூக்கி வந்து கரையில் வைத்தனர்

இது குறித்து திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருமானூர் போலீசார் பெண் சிசுவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் சிசுவை ஆற்றில் வீசியது யார் எங்கே வீசப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் சிசு கொள்ளிடம் ஆற்றில் மிதந்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.