அதிமுக தொடர் வெற்றியால் கோவை புறக்கணிக்கப்பட்டு வருகிறது என பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேட்டி. ஆளுனர் குறித்த கேள்வி எழுப்பியதும் நன்றி வணக்கம் என கூறிவிட்டு சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன்.
கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்காமல் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது. இந்த கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோவை மாநகர மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றி செல்வன்,கோவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், சிங்காநல்லூர் ஜெயராமன், கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை வடக்கு அம்மன் அர்ச்சுணன், சூலூர் கந்தசாமி ஆகியோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இக்கூட்டத்தில் பங்கேற்காதது, கண்டனம் தெறிவித்தனர். கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது சுமார் 3 மணி நேரம் நடைப்பெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பதில் அளித்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் கோவை மாவட்ட ஆட்சியர் பங்கு பெறாதது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை, பதில் கூற அதிகாரிகளும் வரவில்லை. மேலும் கண்துடைப்பிற்காக நடத்தப்பட்ட கூட்டமாக தான் இருந்தது. அதிமுக தொடர் வெற்றியால் கோவை மாவட்டம் தொடர்ந்து புறகணிக்கப்பட்டு வருவதற்கு சான்று மாவட்ட ஆட்சியரே கூட்டத்திற்கு வராதது ஒன்று என்றார்.

அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதும், மீண்டும் அதிமுக வெற்றி பெரும் என்பதால் எந்த வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூபாய் 500 ஆயிரம் கோடி பணத்தை வீண் அடித்துள்ளனர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் புறநகர் சாலைகள் கைவிடப்பட்டதே உதரணமாக உள்ளது. அத்திகடவு குடிநீர் திட்டம் இன்னும் நிறைவேற்றபடவில்லை. ஆளுனர் குறித்த கேள்வி எழுப்பியது நன்றி வணக்கம் என பதில் அளித்து விட்டு சென்று விட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.