மதுராந்தகம் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை போரூர் வளசரவாக்கம் பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (33). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது.

இந்த நிலையில், திருச்சி – சென்னை இடையே தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்ரோடு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் லோடு ஏற்றி வந்த லாரி, காரில் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த பார்வதி மற்றும் சிறுவன் சச்சின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் 5 பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த 5 பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.