மலைப்பாதையில் பயணம் மேற்கொள்ளும் போது வீடியோ பதிவில் சிக்கிய புலி

1 Min Read
சாலையை கடக்கும் புலி

உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில்  வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்த புலியால் வாகன ஒட்டிகள் அச்சம். சாலையை கடந்து சென்ற புலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  உதகை அருகே உள்ள கல்லட்டி சாலை வன பகுதி வழியாக செல்லும் மலை பாதையாகும்.  இந்த கல்லட்டி மலை பாதையில் 36 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையை வீடியோ பதிவு செய்தபடி வந்த போது திடீரென வன பகுதியிலிருந்து  புலி ஒன்று சாலையை நோக்கி பாய்ந்து சென்றது.

சாலையை கடக்கும் புலி

இதனால் வாகனத்தில் வந்தவர்கள் கிலி அடைந்தனர். கண்ணிமைக்கும்  நேரத்தில் பாய்ந்த புலியை வாகனத்தில் பயணித்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்த போது புலி சாலையை கடந்தது பதிவானது.  இந்த வீடியோ தற்போது சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.

Share This Article

Leave a Reply