கடலூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம். போலீசார் தீவிர விசாரணை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு.
கடலூர் மாவட்டம், அடுத்த முதுநகர் அருகே உள்ள வழி சோதனைப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் புஷ்பராஜ் வயது (23).

இவர் தனது தாயார் பவளக்கொடி வயது (38) மற்றும் பாட்டி அமுதா வயது (56) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வழி சோதனை பாளையத்தில் இருந்து கடலூர் முதுநகர் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழிசோதனை பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது, புஷ்பராஜ் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென்று வெடித்து சிதறியது. அதில் மார்பு மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்த புஷ்பராஜ் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பவளக்கொடி மற்றும் அமுதா ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் அங்கு இருந்தவர்கள் காவல் துறைக்கு தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதை பார்த்த அங்கு சென்ற அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் உதவியால் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் புஷ்பராஜ் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் செல்போனில் வெப்பம் அதிகரித்து வெடித்ததா அல்லது செல்போனில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு வெடித்ததா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது செல்போன் வெடித்து வாலிபர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.