- சென்னையை அடுத்த செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய நபருக்கு பன்னிரெண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு நின்றிருந்த சென்னை மிண்ட் பகுதியை சேர்ந்த ஶ்ரீனிவாசன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 23.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன்பு நடைபெற்றது. அப்போது , தன் மீதான குற்றச்சாட்டை ஶ்ரீனிவாசன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவருக்கு பன்னிரெண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.