வாணியம்பாடி அருகே கள்ளக் காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை. பெண்ணின் உறவினர்கள் பெண்ணை சமாதானம் செய்து அழைத்து செல்ல முயன்ற போது கள்ளக் காதலனை தொடர்ந்து காதலி தற்கொலை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேங்காய் பற்றை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் வயது (40). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் முடிந்து வினோதினி வயது (14) என்ற மகளும்,ராமன்,லக்ஷ்மன் வயது (13) என்ற மகன்கள் என 3 பிள்ளைகள் உள்ளன.கர்நாடகா மாநிலம் வைட் பீல்டு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்.இவருடைய மனைவி பூஜா வயது (26). திருமணம் முடிந்து ஜகதேவ் வயது (6), கிரண் வயது (4) என்ற 2 மகன்கள் உள்ளன.

இந்நிலையில் சந்திரசேகர் வேலைக்கு சென்ற இடத்தில் பூஜா உடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பூஜா வீட்டை விட்டு வெளியேறி சந்திரசேகர் உடன் வாணியம்பாடி அடுத்த தேங்காய் பட்டறை கிராமத்திற்கு வந்துள்ளனர்.தேங்காய் பட்டறை கிராமத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தேங்காய் தோப்பில் சந்திரசேகர் உறவினர் செல்வம் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பூஜா மற்றும் சந்ரசேகர் தேங்காய் தோப்பில் காவலாளி செல்வம் என்பவர் வீட்டில் கடந்த ஒரு மாதமாக வாழ்ந்து வந்துள்ளனர்.மனைவி பூஜா காணாமல் போனதை தொடர்ந்து அவரது கணவர் தேவராஜ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடகா மாநிலம் வைட் பீல்டு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்து செய்துள்ளார். இந்நிலையில் பூஜா திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேங்காய் பட்டறை கிராமத்தில் தென்னந்தோப்பில் சந்திரசேகரன் உடன் வாழ்ந்து வருவதாக உறவினர் மற்றும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இன்று காலை பூஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேங்காய் பட்டறை கிராமத்திற்கு வருகை தந்து பூஜா மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கி பூஜாவை காரில் அழைத்து செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக சந்திரசேகர் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த பூஜா அதே தென்னந்தோப்பில் உள்ள மற்றோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சுமார் 2 மணி நேரம் போராடி தற்கொலை செய்து கொண்ட பூஜா மற்றும் சந்திரசேகர் ஆகியோரை சடலமாக மீட்டனர். பிரேதங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கிராம போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.