கோயிலில் உள்ள நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க உத்தரவிட கோரி வழக்கு.

1 Min Read
உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு
  • கோயிலில் உள்ள நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க உத்தரவிட கோரி வழக்குநந்தவனங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

மதுரையை சேர்ந்த ஜெய வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல் செய்த பொது நல மனு

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்து வருகின்றனர். கோயில்களில் நந்தவனம் அமைக்கப்பட்டு அதில் செடிகள், பூந்தோட்டம் வைக்கப்பட்டிருக்கும், அங்கு பக்தர்கள் ஓய்வு எடுப்பார்கள். ஒரு சில பிரசித்தி பெற்ற கோவில்களில் மட்டுமே நந்தவனம் முறையாக பராமரித்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு உள்ளது.

பூந்தோட்டங்களில் இருந்து பறிக்கப்படும் பூக்கள் வைத்து கோவிலில் உள்ள சாமிகளுக்கு தரிசனம் செய்யப்படும். கோயில்களில் உள்ள மரங்கள், குளங்கள் மற்றும் நந்தவனத்தை பாதுகாக்க ஊழியர்களை நியமித்து முறையாக பராமரித்து பக்தர்களுக்கு உபயோகிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

இதுபோன்று நந்தவனங்களை பாதுகாத்தால் கோயில்களில் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்வார்கள், மேலும் கோயில்களில் உள்ள அரிய வகை மரங்கள் பாதுகாக்கப்படும். எனவே தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ள நந்தவனங்களை பராமரித்து, முறையான அடிப்படை வசதிகளில் செய்து, பூச்செடிகள் மற்றும் மரங்களை பாதுகாத்து பராமரிக்க பாதுகாவலரை நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்

இந்த வழக்கை நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மதுரை உயர் நீதிமன்றம்

அப்போது கோவில்களில் உள்ள நந்தவனங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தவறு செய்ய இந்து சமய அறநிலைத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Share This Article

Leave a Reply